கோவை: கோவை மதுக்கரை அருகே கஞ்சா சாக்லெட் விற்க முயன்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குவாரி ஆபிஸ் பகுதியில் பீடா கடை நடத்தும் சோன்கார்(30) என்பவர் கடையில் வைத்து கஞ்சா சாக்லெட் விற்பதாக புகார் எழுந்துள்ளது. போலீசுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோன்காரை சுற்றி வளைத்து 5 கிலோ கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.