பின்னர் ஒரு குழு கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 4 குழுக்கள் யானைகளை விரட்டக்கூடிய பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கனவே 5 யானைகள் வனத்திற்குள் சென்றிருக்க கூடிய சூழலில் எஞ்சி இருக்கக்கூடிய குட்டி உட்பட 6 யானைகள் முட்புதர்களுக்குள் தஞ்சம் அடைந்துள்ளது. முட்புதரை சுற்றி வனத்துறை அதிகாரிகள் 4 பகுதிகளிலும் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. யானைகள் பகல் நேரத்திலும் ஊருக்குள் உலா வருவதினால் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும் யானைகள் இருக்கக்கூடிய சுற்றுவட்டார சாலையில் பயணிக்க வேண்டாம் என்றும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.