கோவை அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்று வரக்கூடிய கவுன்சிலர் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு மற்றும் முத்துசாமி பங்கேற்றுள்ளனர். மாநகராட்சிக்கு உட்பட்ட திமுக கவுன்சிலர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இக்கூட்டத்தில் தலைமை கழகத்தின் முடிவின் அடிப்படையில் வேட்பாளராக ரங்கநாயகி நிறுத்தப்பட்டுள்ளார். கோவையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் தற்போது மேயராக தேர்தெடுக்க கூடியவர் எத்தகைய பணிகளை மேற்கொள்ளப்போகிறார் என்பது குறித்தான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. தற்போது மேயராக அறிவிக்கப்பட்டிருக்கிறவர் நாளை நடைபெற உள்ள தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்.