கோவை: சிறுவாணி மலை அடிவாரத்தில் நேற்று பெய்த மழையால் சித்திரைச்சாவடி அணைக்கட்டில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சிறுவாணி மலையடிவார பகுதியில் நேற்று 6 செ.மீ., சிறுவாணி அணைப்பகுதியில் 12 செ.மீ. மழை பெய்தது. பலத்த மழை பெய்ததன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி அணைக்கட்டில் புது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோவை மாவட்டம் சித்திரைச்சாவடி அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு
previous post