கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் ரூ.13 லட்சம் ரொக்கம், நகை மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் நுழைந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் வீட்டில் இருந்தவர்களை கட்டிப்போட்டு கைவரிசை காட்டியுள்ளனர். பஞ்சு வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் கமலேஷ் வீட்டில் நடந்த கொள்ளை குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.