தொடர்ந்து உழவர் சந்தை சென்று அங்கிருந்த விவசாயிகளிடம் சந்தை பராமரிப்பு விவரங்களை கேட்டறிந்தார். சந்தைகளில் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறதா எனவும் கேட்டனர். வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் குழுவினர் பார்வையிட்டனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வ பெருந்தகை; உதகையில் பல பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் சென்ற செல்வா பெருந்தகை பழங்குடியின மக்களுக்கு சாதி சான்று, வாரிசுச் சான்றிதழ்களை வழங்கினார்.