அதனால், கோவையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என வந்த மிரட்டல் இமெயிலால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் விசாரணையில் அந்த இ-மெயில் முகவரி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது மெயிலை யாரோ பயன்படுத்தி மிரட்டல் விடுத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது மெயிலை போலியாக பயன்படுத்தி குண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “கோவையில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என வந்த மின்னஞ்சல் வதந்தி. யாரும் அச்சப்பட தேவையில்லை’’ என்றார்.