சென்னை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு 3 மாதம் இடைகால ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார். பாஷாவை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அவரது மகல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.