கோவை: கோவை மாவட்டம் வீரகேரளம் அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் மணிகண்டன், அன்புராஜை கத்தியால் குத்திய 3 பேர் கைது செய்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர்களிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்திவிட்டு தப்பிய 3 இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. இளைஞர்கள் சோபன்பாபு, குணசேகரன், தினேஷ் ஆகிய மூவரை போலீஸ் கைது செய்து சிறையிலடைத்தது.