ஆனால், கடலோர மற்றும் மீனவ மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. தவறாக புரிந்துள்ளனர். இவர்களுக்கு விளக்கி கூறி, புரிதல் ஏற்படுத்தாமல், கடலோர மண்டல மேலாண்மை வரைவுத் திட்டம் தயாரிப்பது சரியாக இருக்காது. சில மாநிலங்களில் அந்தந்த மாநில மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை தமிழ் மொழியில் வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர், மனுவிற்கு ஒன்றிய மற்றும் மாநில அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.