ஏடிஎம்மில் திருட கோச்சிங் கிளாஸ்: இளைஞர்களை வைத்து ரூ. 39 லட்சம் சுருட்டிய மோசடி கும்பல்: அதிரிச்சி தகவல்

உத்திரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஏடிஎம்மில் திருடுவது எப்படி என கோச்சிங் கிளாஸ்யில் பயிற்சி பெற்று சுமார் ரூ. 39 லட்சம் பணத்தை இளைஞர்கள் திருடி சென்ற சம்பம் அரங்கேறியுள்ளது.உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் ரூ. 39 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வந்துள்ளனர். இதில் லக்னோ சுல்தான் பூர் தேசிய நெடுஞ்சாலையில் வைத்து கும்பலை மடக்கிப்பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 9 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரில் நீரஜ் என்பவர் கும்பலின் முக்கிய குற்றவாளி என்பது தெரியவர அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் பீகாரை சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவர் நாடு முழுவதும் வேலை இல்லாத இளைஞர்களை திரட்டி 15 நிமிடங்களில் ஏடிஎம்-ல் திருடுவது எப்படி என கோச்சிங் கிளாஸ் நடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. 30 நாட்கள் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை ஏடிஎம்-ல் திருட அனுப்பியதும் தெரியவர கும்பலை பீகார் அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்