கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு நாளை குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை: சென்னை மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நாளை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என கூட்டுறவு பதிவாளர் மிருணாளினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில், சென்னை மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தங்களது குறைகளை பணியாளர் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம். அதன்படி, சென்னை மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் நிகழ்வு நாளை காலை 10.30 மணி அளவில், எண்.215, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை-600 108 என்ற முகவரியில் அமைந்துள்ள, சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகக் கூட்ட அரங்கில் நடைபெறும்.

Related posts

போதைப்பொருள் பார்சல் வந்துள்ளதாக கூறி சென்னையில் 8 மாதத்தில் தொழிலதிபர்கள், பெண்களை மிரட்டி ரூ.132 கோடி பணம் பறிப்பு: பொதுமக்கள் உஷாராக இருக்க கமிஷனர் அருண் எச்சரிக்கை

ரேஸ் கிளப் குத்தகை ரத்தானதை எதிர்த்து கிளப் சார்பில் உரிமையியல் வழக்கு: அரசு பதில் தர உத்தரவு

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகாமல் இருக்க நியாயமான காரணங்கள் இருந்தால் எடப்பாடிக்கு விலக்கு அளிக்கலாம்: சிறப்பு நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் பதில் மனு