தொடர்ந்து, அன்புமணி பேசியதாவது: சமூக நீதியின் பிறப்பிடம் தமிழ்நாடு. அப்படிப்பட்ட தமிழ்நாட்டில் உடனடியாக சமூக நீதியை நிலை நாட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அன்றே, தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியிருந்தால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாறியிருக்கும். நாங்கள் ஒரு சாதிக்காக மட்டும் கோரிக்கை விடுக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 540 சாதிகளின் நிலை எப்படி உள்ளது என்று அறிந்து கொள்ளவே வலியுறுத்துகிறோம். புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டம் 2008ன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றார். இதில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஒன்றிய முன்னாள் அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ஜி.மாசிலாமணி, இந்திய கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அசோக் வரதன் ஷெட்டி, பாமக வடக்கு மண்டல இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்பி செந்தில், வழக்கறிஞர் பாலு, தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.