முதல்வரின் நடவடிக்கைகள் கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், கடுங்காவல் தண்டனையோடு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய விற்பனைக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வரின் தொடர் நடவடிக்கைகள், கள்ளச்சாராய மரணங்களுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு