இந்த கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாற்று பணி அல்லது வேறு கடைகளில் பணியாற்ற வழிவகை ஏற்படுத்தி தரப்படும். மூடப்பட்ட இந்த 500 கடைகளில் உள்ள மதுபானம் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தையும் அருகில் உள்ள குடோன்களில் ஒப்படைக்கப்படும். மூடப்பட உள்ள கடைகளில் இன்று முதல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அதேநேரம் இந்த கடைகளில் உள்ள மதுபானங்கள், பணம், பொருட்கள் அனைத்தையும் அடுத்த 7 நாட்களுக்குள் மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, கடைகள் முழுவதுமாக அகற்ற வேண்டும்.
இந்த கடைகளுக்கு அட்வானஸ் தொகை வழங்கப்பட்டு இருந்தால், வாடகையை கழித்துவிட்டு மீதி பணத்தை மாவட்ட மேலாளர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இந்த நடவடிக்கைகளை டாஸ்மாக் தணிக்கையாளர்கள் கண்காணித்து, அந்த தகவலை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். தகவலை தெரிவிக்காத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். பணம் திருப்பி வழங்குவதில் முறைகேடோ அல்லது பணம் குறைந்தாலோ அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட கலெக்டர்களும் இதை கண்காணித்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.