ஹீலியம் பலூனில் சிறிய பாராசூட் கருவியுடன் இணைத்து பறக்கவிடப்பட்ட செயற்கை கோள், விண்ணில் 27 கிலோ மீட்டர் பறந்து சென்றது. பின்னர் ஹீலியம் பலூன் வெடித்ததால் செயற்கை கோள் பாராசூட் உதவியுடன் தஞ்சாவூரில் தரையிறங்கியதை, மாணவர்கள் சேட்லைட் உதவியுடன் உறுதி செய்தனர். இதுகுறித்து, மாணவர் குழுவினர் கூறுகையில், 500 கிராம் எடையில், ₹25ஆயிரம் செலவில் இதனை வடிவமைத்து யுஎல்ஒஜி-3 என பெயரிட்டோம். வானில் காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் அழுத்தம் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் கண்டறியும் திறன் கொண்டது. இந்த செயற்கைக்கோள், மூன்றரை மணி நேரம் வானில் பறந்து, தகவல்களையும், சில படங்களையும் பதிவு செய்திருக்கிறது. செயற்கை கோளை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்றனர்.