கடற்கரையில் தேங்கும் குப்பைக்கழிவுகள், கடற்கரை சுற்றுச்சூழலை பாதித்து கடல்சார் உயிரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் சுற்றுலாத்தலமும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றன. இத்தூய்மைப் பணியில் சுமார் 150 வங்கி ஊழியர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சுற்றுப்புறச்சூழல் குறித்தும், கடற்கரையின் தூய்மையின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் பொதுமக்களுக்கான மருத்துவ முகாம், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கேளிக்கை விளையாட்டுகள் நடத்தப்பட்டன.