கோவை: 84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மண்பாண்ட தொழில், விவசாய நில மேம்பாட்டுக்காக களிமண், வண்டல் மண்ணை இலவசமாக எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. களிமண், வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ள tnesevai.tn.gov.inல் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.