Friday, June 28, 2024
Home » ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி செம்மொழி நாள் விழா கொண்டாடப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி செம்மொழி நாள் விழா கொண்டாடப்படும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

by Neethimaan


சென்னை: சட்டப்பேரவையில் நேற்று தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, எழுதுபொருள் மற்றும் அச்சு துறை மானிய கோரி மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

* ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாள் தாய்மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும்.

* ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ம் தேதி செம்மொழிநாள் விழாவாக கொண்டாடப்படும். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ₹1.88 கோடி ஒதுக்கப்படும்.

* தமிழ் அறிஞர்கள் ஒன்பதின்மர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமை தொகைக்கென ₹91.35 லட்சம் வழங்கப்படும்.

* ஜனவரி 25ம் நாளை தமிழ்மொழி தியாகிகள் நாள் எனப் பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ₹2 லட்சம் வழங்கப்படும்.

* முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்பட்டு, ₹11 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

* வீறுகவியரசர் முடியரசன் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ₹50 லட்சம் வழங்கப்படும்.

* சண்டிகர் தமிழ் மன்ற கட்டிட விரிவாக்க பணிக்கு ₹50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

* சென்னை அரசு மைய அச்சகத்திற்கு புதிய இயந்திரம் ஒன்று ₹9 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டு உட்கட்டமைப்பு மற்றும் மின் பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* திருச்சி அரசு கிளை அச்சகத்திற்கு நிரலாக்க வெட்டும் இயந்திரம் ஒன்று ₹85 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.

* சென்னை அரசு மைய அச்சகம், அரசு கிளை அச்சகம் மதுரை, சேலம் மற்றும் புதுக்கோட்டை அலகுகளில் உள்ள கணினி முன் அச்சுப் பிரிவிற்கு தேவைப்படும் கணினிகள், பிரிண்டர்கள் ₹37.33 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்.

You may also like

Leave a Comment

11 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi