10,11ம் வகுப்பு துணைத்தேர்வு, ஜூன் 20 முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு!

சென்னை: 10 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஜூன் 20ம் தேதி முதல் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; நடைபெறவுள்ள ஜூன், ஜூலை 2023 மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தேர்வர்களும் (தட்கல் உட்பட) 20.06.2023 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று “HALL TICKET” என்ற வாசகத்தினை ‘கிளிக்’ செய்த பின்னர் தோன்றும் பக்கத்தில் ” “HSE FIRST YEAR, SSLC – JUNE, JULY 2023 SUPPLEMENTARY EXAMINATION HALL TICKET DOWNLOAD” என்ற வாசகத்தினை ‘கிளிக்’ செய்ய வேண்டும். தோன்றும் பக்கத்தில், விண்ணப்பித்தவர்கள், விண்ணப்ப எண் (APPLICATION NUMBER) அல்லது நிரந்தரப்பதிவெண் (PERMANENT REGISTER NO) மற்றும் பிறந்த தேதியினைப் (DATE OF BIRTH) பதிவு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்விற்கு பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 22.06.2023 (வியாழக்கிழமை) முதல் 23.06.2023 ( வெள்ளிக்கிழமை) வரையிலான நாட்களில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறைத்தேர்வு நடைபெறவுள்ளது. மேலும், இத்தேர்வர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே செய்முறைத் தேர்வு நடத்தப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். உரிய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு