சென்னை: மனித – வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என அரசுக்கு முறையீடுகள் வந்ததை அடுத்து நிவாரணத் தொகையை அதிகரித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.