இதனை காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சருமான தா.மோ.அன்பரசன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று காலை 12 மணியளவில் அடுத்தடுத்து வந்து நேரில் ஆய்வு செய்து விட்டு சென்றனர். அப்போது காட்டாங்கொளத்தூர் ஒன்றிய வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வி.எஸ். ஆராமுதன், துணை செயலாளர் பத்மநாபன், ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன் உட்பட சிஎம்டிஏ நிர்வாக உயரதிகாரிகள், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.