மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் சிக்னல் அருகே நேற்று முன்தினம் இரவு கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் சிலர், மாநகர பேருந்தில் ஏறி ரகளையில் ஈடுபட்டு வந்தனர். அதை நடத்துனர் தட்டிக் கேட்டதால் கீழே இறங்கிய அவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு நடத்துனரை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் நடத்துனர் கீழே இறங்கி வந்து அருகில் இருந்த கல்லை எடுத்து அவர்களை ஓட ஓட விரட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்