சென்னை: திருவல்லிக்கேணியில் 29A என்ற வழித்தடம் கொண்ட மாநகரப் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. டிக்கெட் எடுக்கச் சொன்னதால் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்தின் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பியோடிய இருவரை ஜாம்பஜார் போலீசார் தேடி வருகின்றனர்.