புதுடெல்லி: இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் 12ம் வகுப்பு வேதியியலுக்கான தேர்வை ஒத்திவைத்துள்ளது. சிஐஎஸ்சிஇ போர்டு தேர்வுகள் பிப்.12ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொல்கத்தாவில் வேதியியல் தேர்வு வினாத்தாள் வெளியானதாக தகவல் பரவியது. அந்த தேர்வு நேற்று நடைபெற இருந்தது. ஆனால் திடீரென தேர்வு நிறுத்தப்பட்டு, மார்ச் 21ம் தேதி மதியம் 2 மணிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இதுபற்றி சிஐஎஸ்சிஇ யின் துணைச்செயலாளர் சங்கீதா பாட்டியா,’ சில எதிர்பாராத சூழ்நிலைகளால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
சிஐஎஸ்சிஇ பிளஸ் 2 வேதியியல் தேர்வு திடீர் ஒத்திவைப்பு
previous post