சென்னை: சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி தமிழக அரசின் உள்துறை செயலாளரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மனு அளித்துள்ளது. மல்ட்டிபிளக்ஸ் ஏ.சி.தியேட்டரில் ரூ 150 டிக்கெட்டை ரூ 250ஆக உயர்த்த வேண்டும். மல்ட்டிபிளக்ஸ் ஏ.சி. இல்லாத தியேட்டரில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ. 150ஆக உயர்த்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏ.சி. இல்லாத தியேட்டர்களில் கட்டணத்தை ரூ. 80லிருந்து ரூ.120ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.