சினிமா உதவி எடிட்டர் மயங்கி விழுந்து பலி

சென்னை: ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிரத்தினம் ரெட்டி (48). சினிமா உதவி எடிட்டரான இவர், வடபழனியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். கடந்த ஒரு வாரமாக, உடல் நலக்குறைவு காரணமாக இவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் தனது அறையில் இருந்து, மருந்து வாங்க அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்புக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மயங்கி கிடந்த மணிரத்தினம் ரெட்டியை சோதனை செய்த போது, அவர் இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வடபழனி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்