திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளியின் நிறுவனத் தலைவர் ஜி.தனராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் ஜூடித் டேனியல் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கும், விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசு, விருது, சான்றிதழ் வழங்கினார். அப்போது அவர் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வும் மற்றும் கல்வியின் அவசியம் குறித்து உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் நடைபெற்றது. இந்த விழாவினை ஒருங்கிணைப்பு செய்த அனைத்து ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பள்ளியின் நிறுவனத் தலைவர் ஜி.தனராஜ் வாழ்த்து தெரிவித்தார்.