பெங்களூர் : பாலியல் புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நடன இயக்குநர் ஜானி கைது செய்யப்பட்டார். பெண் நடனக் கலைஞர் அளித்த புகாரில் வழக்கு பதியப்பட்ட நிலையில் பெங்களூருவில் ஜானி கைதாகினார். 16 வயதில் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்ததால் போக்சோ சட்டத்தின்கீழ் ஜானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேசிய விருது வென்ற ஜானி திரைப்படங்களில் பணியாற்ற தெலங்கானாவில் ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டது.