சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமியின் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: துக்ளக் நிறுவனரும் மறைந்த மூத்த பத்திரிகையாளருமான சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமியின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் தெரிவித்துள்ளதாவது; “துக்ளக் நிறுவனரும் – அப்பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்து மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சோ அவர்கள் தனது வாழ்நாளில் பத்திரிகை உலகிலும், திரைத்துறை மற்றும் பொது வாழ்விலும் தனி முத்திரை பதித்ததற்கு உற்ற துணையாக இருந்த சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Related posts

செங்கல்பட்டில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

எல்.பி.ஜி.கேஸ் லாரி உரிமையாளர்கள் போராட்டம்..!!