திருவள்ளூர்: சோழவரத்தில் ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரை செய்துள்ளதாக ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சிபிஐக்கு மாற்றக்கோரி சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி முத்து சரவணன் தந்தை தொடர்ந்த வழக்கு மார்ச் 11க்கு ஒத்திவைக்கப்பட்டுளள்து.