விழாவின், 3ம் நாள் 63 நாயன்மார்கள் உற்சவமும், விழாவின் 5வது நாள் திருக்கல்யாண உற்சவமும், ஏழாவது நாள் தேர் உற்சவம் நடைபெற்றது. விழாவின், பத்தாவது நாள் அன்று கொடி மரத்திலிருந்து கொடி இறக்கமும், தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்றது. இதில், 11வது நாள் மற்றும் நிறைவுநாளான நேற்று ஆட்சீஸ்வரர் இளங்கிளி அம்மன் அலங்கரிக்கப்பட்ட மலர் அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு காந்தி நகர், தேனம்பாக்கம், அண்ணா நகர், அரப்பேடு ஆகிய கிராமங்களில் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில், பெரும்பேர் கண்டிகை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஸ்ரீ ஆட்சீஸ்வரின் இளங்கிளி அம்மனுடன் சுற்றி வலம் வருவது மிக சிறப்பான நிகழ்வாக பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.
அதன் பின்னர் பெரும்பேர் கண்டிகைச் சென்ற ஆட்சீஸ்வரர் இளங்கிளி அம்மன் திருமண காட்சி கோலத்தில் அகத்தியருக்கு காட்சி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கத்தில் உள்ள வஜ்ரகிரி மலையை ஆட்சீஸ்வரனும் இளங்கினி அம்மனும் கிரிவலமாக வந்து கிரிவலப் பாதையில் உள்ள கிராமங்களில் உள்ள பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.