பின்னர் மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து குப்பை கிடங்கில் கொட்டி வைத்தனர். அதைப்போல அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன்பும் உள்ள குப்பைகளை, செடிகளை அகற்றினார்கள். அதைப்போல சின்னசேலம் விஜயபுரம் 10வது தெருவில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பொதுஇடத்தில் சிலர் குப்பை கொட்டி வைத்தனர். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அந்த இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றினர். பின்னர் அந்த இடங்களில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா மேற்பார்வையில் மகளிர் தூய்மை பணியாளர்கள் இந்த இடத்தில் குப்பைகளை கொட்டாதீர்கள் என்று எழுத்தால் எழுதியும், வண்ண வண்ண கோலம் போட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இது சமூக ஆர்வலர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.