சென்னை: ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மாட்டேன்; வரி கொடுக்க மாட்டேன் என கோட்டை கட்டிப் போராடியவர் சின்னமலை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை என நெஞ்சுரம் காட்டிய தீரருக்கு மலர்வணக்கம். நெஞ்சுரம் காட்டிய தீரர் சின்னமலைக்கு கலைஞர் அமைத்த சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.