சண்டிகர்: பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் போதைப்பொருளால் மிகவும மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் எல்லைப் பாதுகாப்பு படையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தானோ குர்த் கிராமத்தில் ஒரு வயல்வௌியில் விழுந்து கிடந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட சிறியரக ஆளில்லா விமானம், அதிலிருந்த 545 கிராம் ஹெராயின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.