போரில் ரஷ்யாவால் கடத்தப்பட்ட உக்ரைன் வீரர்களை விடுவிக்க வேண்டும். போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு மாநாட்டில் கொண்டுவரப்படும் திட்டங்கள் பற்றி விவாதிக்க உக்ரைன் தயாராக உள்ளது. அதிக அளவிலான நாடுகள் பங்கேற்கும்போது அதை ரஷ்யா கேட்க வாய்ப்பு உள்ளது. இதற்காக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்-ஐ சந்தித்து பேசுவேன்.சீனா மூலம் அமைதி மாநாட்டை சீர்குலைப்பதற்கு ரஷ்யா முயற்சித்து வருகிறது. அதனடிப்படையில், அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க கூடாது என பல நாடுகளுக்கு தூதர்கள் மூலம் சீனா மிரட்டல் விடுக்கிறது’’ என்றார்.