கோபி பாலைவனத்தில் உள்ள ஜியுகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து ஹைபர்போலா 1 ராக்கெட் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட்டின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலைகள் எதிர்பார்த்தபடி செயல்பட்டது. ஆனால் ராக்கெட்டின் நான்காவது நிலை செயல்பாடு தோல்வியில் முடிந்தது. விண்வெளி ராக்கெட் தோல்வியடைந்ததற்கான காரணங்கள் விரிவான ஆய்வுகளுக்கு பின் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.