அதற்காக அவர்களின் சித்தாந்தத்தை கூட தள்ளி வைத்துவிடுகின்றனர். எனவே சமூகத்தில் இருக்கும் வறுமை, பொருளாதார மற்றும் சமத்துவமின்மையைக் குறைக்கக்கூடிய பொருளாதார நாடாக நாம் மாற வேண்டும். வறுமையை போக்க வேண்டுமானால், மூலதன முதலீட்டை ஈர்க்க வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவர வேண்டும். விவசாயம், கிராமப்புற மற்றும் பழங்குடியினத் துறைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பத்தில் சீனா முன்னணியில் உள்ளது. அதற்கு போட்டியாக இந்தியா உருவாக வேண்டும். அண்டை நாடுகளுடன் போட்டியிடும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் துறையில் இந்தியா உலகின் மூன்றாவது இடத்தில் உள்ளது’ என்றார்.