டெல்லி: சீனாவில் நிமோனியா காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இந்தியாவில் அதனை எதிர்கொள்ள தயார்நிலையில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் நிமோனியா காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.