இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் பாபுவை தேடி வந்தனர். இந்நிலையில், திருச்சியில் தலைமறைவாக இருந்த டாக்டர் பாபுவை கைது செய்து, காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர் பாபுவை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டார்.இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கை குறித்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை டாக்டர் மாறன்பாபு விசாரித்து வருகிறார்.