மாணவியிடம் சில்மிஷம் அரசு டாக்டர் சஸ்பெண்ட்

குடியாத்தம்: நர்சிங் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு கைதான அரசு டாக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்காதோப்பு கிராமத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவி, குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் மாணவி பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது பணியில் இருந்த எலும்பு முறிவு டாக்டர் பாபு மாணவியின் கையை பிடித்து இழுத்து, சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் பாபுவை தேடி வந்தனர். இந்நிலையில், திருச்சியில் தலைமறைவாக இருந்த டாக்டர் பாபுவை கைது செய்து, காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு டாக்டர் பாபுவை சஸ்பெண்ட் செய்து மருத்துவத்துறை இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டார்.இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கை குறித்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை டாக்டர் மாறன்பாபு விசாரித்து வருகிறார்.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது