சென்னை: தமிழகத்தில் செயல்படும் சிறுவர் இல்லங்கள். ஆதரவற்றோர் இல்லங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அம்பத்தூர் அருகே சிறுவர் இல்லத்தில் உள்ள 38 பேருக்கு முறையான கல்வி வழங்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுவர் இல்லத்தின் உரிமம் கடந்தாண்டே ரத்து செய்யப்பட்டு விட்டது என தமிழக அரசு வாதம் செய்தது. சிறுவர் இல்லத்தில் இருந்த 38 குழந்தைகளும் மீட்கப்பட்டு சேவாலயா இல்லத்தில் சேர்க்கப்பட்டனர் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.