சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள், குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க நிரந்தர கண்காணிப்பு குழு அமைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது தீட்சிதர்களுக்கு எதிராக சென்னை வழக்கறிஞர் சரண்யா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு உள்ள சட்டங்களை தீட்சிதர்கள் பொருட்படுத்தவில்லை என்று மனுவில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.