இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ராஜா வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். வீட்டில் குழந்தையுடன் இருந்த ரோஷினி, மாலையில் வெளியில் வராமல் இருந்துள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் ரோஷினி தூக்கில் தொங்கியுள்ளார். உடனே ராஜாவிற்கு தகவல் கொடுத்துவிட்டு, வீட்டிற்குள் சென்று அவரது உடலை இறக்கியுள்ளனர். குழந்தை நிதர்சனும் இறந்து கிடந்தான். இதனால், குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் ரோஷினி தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.இதுபற்றி தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி, தாய், மகன் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் பற்றி பனமரத்துப்பட்டி போலீசில் ரோஷினியின் தாய் லதா அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி அமலாஅட்வின் வழக்குப்பதிவு செய்தார். திருமணமான 7 ஆண்டிற்குள் இளம்பெண், குழந்தையுடன் இறந்திருப்பதால் சேலம் ஆர்டிஓ அம்பாயிரநாதன் விசாரணையை தொடங்கியுள்ளார். அதில், இறந்த ரோஷினியின் கணவர் ராஜா மற்றும் அவரது குடும்பத்தாரிடம் ஆர்டிஓ, டிஎஸ்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமை அல்லது வேறு வகையில் ரோஷினியை கொடுமை செய்தார்களா?, தற்கொலைக்கு தூண்டினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.