குழந்தையை கொன்று தாய் தற்கொலை

சிவகாசி: விருதுநகர் அருகே கன்னிச்சேரி குமாரபுரத்தை சேர்ந்தவர் சமுத்திரக்கனி மகன் மகேஷ்குமார். இவரது மனைவி சுபலட்சுமி (25). இவர், பிரசவத்திற்காக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டி ஜக்கம்மாள் காலனியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார். அங்கு சுபலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 10 மாதங்களாகியும் மனைவியை மகேஷ்குமார் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம சுபலட்சுமியின் தாய் பாண்டியம்மாள் வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள தகர செட்டில் சுபலட்சுமியும் 10 மாத குழந்தையும் தூக்கில் தொங்கியபடி கிடந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாயும், குழந்தையும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related posts

டெல்லியில் அக்.5 வரை 163 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவிப்பு

சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு

கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள பாகிஸ்தான், 1.5 லட்சம் அரசு பணியிடங்களை குறைத்துள்ளது