குடந்தை அருகே ஆற்றில் குளித்த வியாபாரி மாயம்

*2 நாள்களாக தீயணைப்பு வீரர்கள் தேடுதல்

திருவிடைமருதூர் : கும்பகோணம் அருகே அரசலாற்றில் குளித்த வியாபாரி மாயமானது குறித்து இரண்டாவது நாளாக நேற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம், அம்மாபேட்டையை சேர்ந்த முத்துசாமி மகன் முருகன் (40). தலையணை வியாபாரி. திருமணமாகாதவர். இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியில் உள்ள அரசலாற்றுக்கு குளிக்க சென்றார். ஆனால் அதன் பிறகு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது குடும்பத்தினர், ஊராட்சி தலைவர் அளித்த தகவலின் பேரில், கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ரப்பர் படகு மூலம் அரசலாற்றில் முருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமாகியதால் முருகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்றும் இரண்டாவது நாளாக தேடுதல் பணி நடைபெற்றது. இருப்பினும் முருகன் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒன்றிய அரசு உடனே ஒப்புதல் தர வேண்டும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டுவந்தார்; ஒருமனதாக நிறைவேறியது

நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க அனுமதி மறுப்பு எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது: ராகுல், கார்கே பேசும் போது மைக் அணைக்கப்பட்டதால் அதிர்ச்சி

தலைநகரில் கொட்டித் தீர்த்த கனமழை டெல்லி விமான நிலைய மேற்கூரை சரிந்தது: பயணிகளுடன் நின்றிருந்த கார்கள் நொறுங்கின; உடல் நசுங்கி ஒருவர் பலி 7 பேர் படுகாயம்