இதில், பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும், ஒருசில மாணவிகள் போட்டி நடைபெற்ற கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறினர். அப்போது, போட்டிக்கு வந்திருந்த நடுவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி மாணவிகளை கீழே இறக்கினர். இதைத்தொடர்ந்து தாழம்பூர் போலீசார், அங்கு சென்று அனைவரையும் சமாதான படுத்தினர். இதையடுத்து போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.