சிலம்ப போட்டி வெற்றியை தோல்வியாக அறிவிப்பு; மாணவிகள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்: மேலக்கோட்டையூரில் பரபரப்பு

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான சிலம்பம், டேபிள் டென்னிஸ், கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை தோல்வி அடைந்ததாக நடுவர்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதில், பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மேலும், ஒருசில மாணவிகள் போட்டி நடைபெற்ற கட்டிடத்தின் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக கூறினர். அப்போது, போட்டிக்கு வந்திருந்த நடுவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி மாணவிகளை கீழே இறக்கினர். இதைத்தொடர்ந்து தாழம்பூர் போலீசார், அங்கு சென்று அனைவரையும் சமாதான படுத்தினர். இதையடுத்து போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்