இதனையறிந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்கள் தலைமை செயலரை கண்டித்து தலைமை செயலகத்தில் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். சபாநாயகர் அனைத்து அமைச்சர்கள் மற்றும் தே.ஜ. கூட்டணி எம்எல்ஏக்களையும் அழைத்து பேச்சு நடத்தினார். மேலும் தலைமை செயலரையும் அந்த கூட்டத்துக்கு அழைத்து பேசினார். அப்போது கூட்டத்துக்கு வந்த தலைமை செயலரை அனைவரும் சரமாரியாக கேள்வி கேட்க கூட்டத்திலிருந்து தலைமை செயலர் பாதியிலேயே வெளியேறினார். முதல்வருக்கு தெரியாமல் அரசு செயலரை மாற்றியது குறித்து சட்டசபை செயலகம் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை விளக்கம் தரவில்லை. புகாருக்கு விளக்கம் தராதது குறித்து ஒன்றிய அரசிடம் புகார் தெரிவிக்கப்படும் என சபாநாயகர் செல்வம் கூறியிருந்தார்.
இந்நிலையில் முதல்வர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் எதிர்ப்பால் புதுச்சேரியில் தலைமை செயலராக தொடர்வது சிரமம் என ராஜீவ் வர்மா கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக புதுச்ேசரியில் இருந்து உடனடியாக தனக்கு பணி இடமாற்றம் கேட்டு ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை ஒன்றிய உள்துறை அமைச்சகமானது விரைவில் ஏற்றுக்கொண்டு புதிய தலைமை செயலரை நியமிக்கலாம் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தலைமை செயலர் தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா செல்வதற்கான அனுமதியை கவர்னர் தமிழிசை வழங்கியுள்ளார்.