சென்னை: ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை நாளை தருமபுரியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கடந்தாண்டு டிச.18-ம் தேதி கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மக்களுடன் முதல்வர் திட்டத்தில் முதற்கட்டமாக நகர் பகுதிகளில் 2,058 முகாம்கள் நடத்தி 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது