தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், ஸ்பெயினில் இருந்து தாய்த் தமிழ்நாட்டுக்குத் திரும்புகிறேன்.
சிறந்த ஒருங்கிணைப்புக்காக ஸ்பெயின் நாட்டுக்கான இந்தியத் தூதரகத்துக்கு நன்றி. புதையலைப் போல அழகிய நினைவுகளுக்காக ஸ்பெயின், அந்நாட்டின் அருமையான மக்கள் மற்றும் அங்கு வாழும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.