சென்னை: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு 129 காவல்துறை, சீருடை பணியாளருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். தலைமைக் காவலர் முதல் காவல் கண்காணிப்பாளர், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையில் முதல்நிலை காவலர் முதல் உதவி சிறை அலுவலர், தீயணைப்பு வீரர் முதல் துணை இயக்குநர், ஊர்ர்க்காவல் படைவீரர் முதல் படைத்தளபதி, விரல் ரேகைப் பிரிவில் 2 ஏடிஎஸ்பிகளுக்கு அண்ணா பதக்கம் அறிவித்துள்ளனர்.